வவுனியா சிறுவர் பூங்காவில் மதுபோதையில் சிலர் அட்டகாசம்!! இருவர் காயம்!!

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை மதுபோதையில் நுளைந்த மூவர் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, NP AAS 0351 என்ற இலக்கமுள்ள முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுளைந்த குறித்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன் அவரது பெறுமதிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்டநேரமாகியும் சம்பவ இடத்திற்கு பொலிசார் சமூகமளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *