வான் பரப்பில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வு..! இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

 

வான் பரப்பில் ஏற்படும் அதிசய நிகழ்வினை பார்வையிடும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அடசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி  12P/Pons-Brooks என்ற விஞ்ஞான பெயர் கொண்ட வால் நட்சத்திரத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அதிக பட்ச வால் நட்சத்திரத்தை இலங்கை மக்கள் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று இந்த வால் நட்சத்திரம் பூமியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் 240 மில்லியன் தூரம் பயணிக்கும்.

இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் மேற்கு வானில் அடிவானத்திற்கு அருகில் இந்த வால் நட்சத்திரத்தை அவதானிக்க முடியும் என பேராசிரியர் ஜானக அதாசூரிய மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *