![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/04/9.jpg)
வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் இனம் அரசியல் தீர்வை, அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்றபோது கல்முனை மாநகரத்தில் வெறுமனே ஒரு வட்டாரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதற்கு இடமளிக்காத தமிழ் தலைமைகள் எவ்வாறு வட, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக அதிகாரப்பகிர்வை எட்ட இடமளிப்பார்கள்? நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். கல்முனையில் தமிழ் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.