இலங்கையிலிருந்து முதன்முதலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள விதைகள்

 

இலங்கையிலிருந்து முதன்முதலாக பலவகையான விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சோளம் ஆகிய விதைகள் இதற்காக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆய்வுகளானது விவயாசத்துறை வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள இந்த விதைகளுக்கு, சர்வதேச நாடுகளில் அதிகளவான கேள்வி காணப்படுகின்றது.

அதேவேளை, இந்த விதைகளை பதப்படுத்தும் நடவடிக்கையானது விவாயசைத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply