தெனியாய பகுதியில் இரண்டு மர்மமான சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!

தெனியாய, விஹாரஹேன பிரதேசத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஹாரஹேன – ஆராதெனிய வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக வீதியின் இருபுறமும் கரைகள் வெட்டப்படும் போதே ஆரதெனிய சந்திக்கு அருகில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதைகள் ஆரம்பத்தில் இரண்டு சுரங்கப்பாதைகளாக இருப்பதாகவும், சுரங்கப்பாதையின் இறுதிப்பகுதி வெளியில் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்த சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுரங்கங்கள் எப்போது கட்டப்பட்டன? அல்லது இயற்கையானதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதேவேளை, குறித்த சுரங்கப்பாதைகள் தொடர்பில் ஆய்வு செய்ய இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *