ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆணைக்குழுவின் அறிக்கை, அதனுடன் தொடர்புடைய சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணத் தொகுப்புகள் நேற்று நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இன்று  நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, 2021 பெப்ரவரி மாதம் 23ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட போதிலும் சட்டச் சிக்கல்கள் காரணமாக சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிகப் பரிசீலனைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், குறித்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *