ரணிலுக்கும் கோட்டாவுக்கும் இடையில் இரகசிய பேச்சு ? வெளியான தகவல் !

கூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையை அவரது சகோதரின் மக்கள் இஷினி விக்கிரமசிங்க முன்னெடுத்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் நேற்று இந்த வதந்திகளை நிராகரித்ததோடு ராஜபக்ஷ உறுப்பினர்கள் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், இஷினி விக்ரமசிங்க கட்சி விவகாரங்களில் ஈடுபடவில்லை என்றும் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இஷினிக்கு அலுவலகம் இல்லை எனவும், கட்சியின் சார்பில் அவர் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி ஒன்றினை அமைப்பதற்காக சம்பிக்க ரணவக்க மற்றும் குமார் வெல்கம ஆகியோருடன் ஐபேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *