நாரா நிறுவனத்தின் புதிய பணிப்பாளராக அருளானந்தம் நியமனம்…!

கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நாரா நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக Dr.அருளானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(06)  வழங்கி வைத்தார்.

குறித்த நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

Dr.அருளானந்தம் நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானியாக நீண்டகாலம் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *