பரீட்சை வினாத்தாள் வௌியானதால் பாரிய சிக்கல்..! முறையான விசாரணை வேண்டும்! ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை

க.பொ.த சாதாரண பரீட்சையின் வினாத்தாள் வௌியானதால் பாரிய பிரச்சனைகள் உருவாகும். இது சம்பந்தமாக முறையான விசாரணை செய்ய வேண்டும்  என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் வௌியானதற்கு சரியான விசாரணைகளை செய்து இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது. 

வினாத்தாள் எண்ணிக்கையை விட அதிகமாக தேர்வுத்துறை அச்சடித்துள்ளது.

இதற்கான காரணம் என்ன? வினாத்தாள்கள் வீணாக போவது ஏன்? இதனால் பாரிய பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு.

நாங்கள் கல்வி அமைச்சிடம் இது தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ள கேட்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *