யாழ் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம்…! நியாயமான தீர்வை வழங்குவேன்…! அமைச்சர் டக்ளஸ் வாக்குறுதி…!

காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டு நியாயமான தீர்வு வழங்கப்படுமென கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ளன.

இதன்காரணமாக குறித்த திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு  அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு இன்றையதினம்(11) காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன், அது குறித்து நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த பிரச்சினை கவனத்தில் எடுக்கப்பட்டு நியாயமான தீர்வு காணப்படும் என வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *