வவுனியாவில் விகாரை புணரமைப்புக்காக திலிபன் எம்பியால் நிதி ஒதுக்கீடு!

வவுனியாவின் எல்லைப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட சிங்களகுடியேற்ற கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் நந்திமித்திரகம கிரமத்தில் அமைந்துள்ள பன்சாலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 

அத்துடன் அதற்கு அண்மையில் உள்ள கம்பிலிவெவ சிங்கள குடியேற்றப்பகுதிக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக 19 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு அவரால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *