சீரற்ற காலநிலையால் 25 ஆயிரம் பேர் பாதிப்பு…! 8 பேர் உயிரிழப்பு- தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை…!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7,028 குடும்பங்களை சேர்ந்த 25,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(30)  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக கம்பஹா  மாவட்டத்தில்  1616  குடும்பங்களை சேர்ந்த6926 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 31 குடும்பங்கள் உட்பட 105 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை  மாவட்டத்தில் 103 குடும்பங்கள்  உட்பட 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 917 பகுதியளவு சேதமடைந்துள்ளன.

கொழும்பில் 20 குடும்பங்கள் உட்பட 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 51 குடும்பங்கள் உட்பட 190 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில்  891  குடும்பங்களை சேர்ந்த 2927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3  பேர்   உயிரிழந்துள்ளதுடன்  ஐவர்  காயமடைந்துள்ளனர். மேலும்  128 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்கள்  உட்பட 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1929 பேர் உட்பட 6651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 5பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன்10 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  1982 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 1321 குடும்பங்கள் உட்பட 4399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 6 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1394 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 588குடும்பங்களை சேர்ந்த 2177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன்4 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  569 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த  75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  19 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.

வடமாகாணத்தில் 447 குடும்பங்களை சேர்ந்துள்ள 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

சப்பிரகமுவ மாகாணத்தில் 811 குடும்பங்களை சேர்ந்த 3,049பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  இருவர்  உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 757 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 786குடும்பங்களை சேர்ந்த 2959 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் .   மேலும் மூவர் காயமடைந்துள்ளார். அத்துடன் 5 வீடுகள் முழுமையாகவும் 732 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  4 குடும்பங்களை    சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 68 குடும்பங்களை சேர்ந்துள்ள 234 பேர் பலத்த காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை வட மத்திய மாகாணத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 263 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஊவாமாகாணம் பதுளையில் 27 குடும்பங்கள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *