தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காத கம்பனிகளுக்கு எச்சரிக்கை!

 

தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காத பெருந்தோட்ட கம்பனிகளின் ஒப்பந்த காலத்தை நிறுத்துமாறு இலங்கை தேயிலை சபைக்கு, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களின் நிர்வாகம் குத்தகை அடிப்படையில் தனியார் துறை தோட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல பெருந்தோட்டக் கம்பனிகள் தாம் சுவீகரித்துக் கொண்ட தேயிலைத் தோட்டங்களை உரிய முறையில் பராமரிப்பதில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்த மானியத்திற்காக இலங்கை தேயிலை சபை 12இ000 மில்லியன் ரூபாயை  செலவிடுகிறது என  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *