துப்பாக்கியை விகாரையில் மறைத்து வைத்து நாடகமாடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி..!

 

தனது கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை விகாரையில் மறைத்து வைத்து  விட்டு கைத்துப்பாக்கியை காணவில்லை என முறைப்பாடு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வெலிஓயா பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் விகாரையில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைத்துப்பாக்கியை கண்டுபிடித்ததாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 31ஆம் திகதி வெலிஓயா பொலிஸ் நிலையத்தின் பகல் கடமைகளுக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைத்துப்பாக்கியை வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லும் வரை விகாரையில் மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்வதற்கான ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *