
தேசிய மட்டத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவிகள் அல்லது பரீட்சார்த்திகள் தமது கலாசார ஆடையை அணிந்து தோற்றுவதில் தொடர்ச்சியாக சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தர பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவிகளின் ஆடையை மையப்படுத்தி ஏதோ ஒரு பரீட்சை மண்டபத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் பதிவாகாமல் இருப்பதில்லை.