
காஸாவில் எட்டு மாத கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா முன்வைத்த யுத்த நிறுத்தத் திட்டத்தினை திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத் தீர்மானத்திற்கு பாதுகாப்பு சபையின் 15 அங்கத்துவ நாடுகளுள் 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில் றஷ்யா மாத்திரம் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.