மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் அவர்களில் கொரோனா மூன்றாவது அலையில் தொற்று உறுதியான 64ஆயிரத்து 157 பேரும் அடங்குகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 77ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 43 ஆயிரத்து 332 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த மூன்று மாவட்டங்களை தொடர்ந்து காலி மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் இதுவரையில் 22,996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *