
எதிர்காலத்தில் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாகப் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்து விலகி, மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே கூட்டணி மலரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.




