நாட்டில் மேலும் 118,241 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் மேலும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 241 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஆயிரத்து 391 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 1460 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 8 ஆயிரத்து 855 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 93 ஆயிரத்து 715 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பைசர் முதல் டோஸ் ஒருவருக்கும் இரண்டாவது டோஸ் 977 பேருக்கும் வழங்கப்பட்டதுடன் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 11,835 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *