நாட்டில் இதுவரையில் 6,000 சுகாதார பணிக்குழாமினருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





