பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை திறக்கும் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஏதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், பாடசாலை மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில், தற்போதைய கொரோனா பரவல் தொடர்பான நிலவரம், பாடசாலை மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாடசாலை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *