
இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்பாக 1990களின் பின்னர் முக்கியமான பல சமூக, சமய மற்றும் கலாசார ரீதியான மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. அதற்கு வழிகோலிய காரணிகள் எவை என்பதை விரிவாக எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றங்கள் எடுத்து வந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாக்கம் ‘சிங்கள –பெளத்த பெரும்பானமை நாடான இலங்கையில் எங்களை அடையாளப்படுத்திக் கொள்வது எப்படி’ என்பது தொடர்பாக முஸ்லிம்கள் எதிர்கொண்ட தடுமாற்ற நிலையாகும்.