கல்முனையில் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம்.

கல்முனையில் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம்.

-நிதான்சன்-

ஏற்கனவே முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (30.08.2021) ஆரம்பமாகியது. கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மக்களை ஆர்வமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளவதில் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.

கல்முனை வடக்கு பரிவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட இடங்கள். வெள்ளிக்கழமை வரை இரண்டாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடரும் என சுகாதார வைத்திய அதிகாரி ஆர். கணேஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை
கல்முனை ஆதார வைத்தியசாலை
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை
பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயம்
பாண்டிருப்பு கலாசார மண்டபம்
சேனைக்குடியிருப்பு சுகாதார நிலையம்
நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயம்
பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *