கொவிட் தொற்றால் மேலும் 41 பேர் மரணம்!

நாட்டில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றால்41 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

உயிரிழந்தவர்களில் 23 ஆண்களும், பெண்கள் 18 பேரும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவர்களில் 30 – 50 வயதுகளுக்கு இடைப்பட்ட 9 ஆண்களினதும், 3 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவ்வாறே, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 14 ஆண்கள் மற்றும் 18 பெண்களின் மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *