வங்கிக் கடன்களை செலுத்த முடியாதவர்களுக்கு மூன்று மாத சலுகை

கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தால் வங்கிக் கடன்கள் மற்றும் குத்தகை தவணைகளை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு மூன்று மாத சலுகைக் காலத்தை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட் மூன்றாவது அலையின் கடுமையான பாதகமான விளைவுகள் காரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடன் திருப்பிச் செலுத்துதலை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை வங்கி மற்றும் நிதி அமைப்புகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, சலுகைக் காலம் நாளை (31) முடிவடைய உள்ளது.

எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த சலுகைக் காலத்தை சிறிது காலம் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *