பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா

<!–

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா – Athavan News

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு  சென்றவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 30 பேரும் வைத்தியர்களின் ஆலோசனை பேரில், வைத்தியசாலையில்  சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் , வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *