<!–
வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (89 வயது) ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த (63 வயது) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 241ஆக அதிகரித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.