சுமார் 250 கிலோகிராம் ஹெரோயினுடன் 5 பேர் கைது

பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபாய் பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *