உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 19கோடியே இரண்டு இலட்சத்து 96ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 40இலட்சத்து 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 17கோடியே 34இலட்சத்து 92ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *