திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

யாழ்ப்பாணம்- கோப்பாய், திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரினால்  இன்று (செவ்வாய்க்கிழமை) விரட்டப்பட்டனர்

குறித்த பகுதியில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால், அதிகளவான மக்கள் ஒன்று கூடி மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, அவ்விடத்தில் தீடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார்,  வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்திலிருந்து விரட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *