ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொரோனா பேரிடர் கால இரத்ததான நிகழ்வு  யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

யாழ்.மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் கே.சிவராம், யாழ்.மாநகர சபை உறுப்பினர், கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் தொகுதி இணைப்பாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *