பாரதிய ஜனதாவை பார்த்து அஞ்சுபவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம்- ராகுல்காந்தி

பாரதிய ஜனதா கட்சியை பார்த்து பயப்படுகின்றவர்கள், காங்கிரஸ் கட்சியை விட்டு எந்நேரத்திலும் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களுடன் காணொளி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு வெளியே உள்ள தைரியமான தலைவர்களையே கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபிகள் காங்கிரஸிற்கு தேவையில்லை. அவர்கள் கட்சியைவிட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *