
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிப்பதா? இல்லையா? என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று(31) காலை நடந்தபோது, அதில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.
அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை 14ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அதுபற்றி நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் பேசப்படவே இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.




