அதிக விலைக்கு விற்கப்படும் தரமற்ற மருந்துகள்!

கொரோனா நோயாளிகளுக்கு அத்தியாவசியமற்ற மருந்துகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதலொன்று வெளியிடப்படாத காரணத்தினால் இந்த தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அத்துடன், கொவிட் நியூமோனியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அனுருந்த ரணவக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *