ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் – சுதர்ஷினி

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கட்டான பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறத்தியுள்ளார்.

மேலும் டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *