நாவற்குழி பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

நாவற்குழி, பெப்.27

யாழ்.தென்மராட்சி – நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவற்குழி ப.நோ.கூ சங்க மண்டபத்திற்கு முன்னால் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதடியை சேர்ந்த ரத்தினகுமார் சுவின்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்துள்ளதுடன், கெற்பேலி மத்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மிருசுவிலை சேர்ந்த இராசதுரை கோணேஸ்வரன் (வயது36) என்பவரும் தலையில் படுகாயமடைந்துள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *