நேர்காணல் ஒன்றில் கொரோனா வைரஸ் பரிசோதனையின் புள்ளிவிபரம் தொடர்பில் முன்வைத்த அறிக்கை குறித்து வாக்குமூலமளிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை அது தொடர்பில் வாக்குமூலம் வழங்க சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயருவன் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்தநிலையில் அவர் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணி கால அவகாசம் வழங்குமாறு கோரியயிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு வைத்தியர் ஜயருவன் பண்டார நேர்காணலில் தெரிவித்த விடயம் தொடர்பில், ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ரசித்த விஜேவன்ன மற்றும் ஒளடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ச ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.





