இரணைமடுக்குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு -தாழ் நிலப்பகுதி மக்களே அவதானம் -நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. ஏற்கனவே வான் பாய்ந்த சிறிய குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளன. 

 இரணைமடுக்குளத்தின் 14வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் 6இஞ்சி அளவில் இன்று மாலை திறந்து விடப்பட்டுள்ளது. 

எனவே தாழ் நிலப்பகுதி மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *