இந்தியாவில் ஒரேநாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு கோடியே 25 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், முன்களப் பணியாளர்களின் கடின உழைப்பையும், பொதுமக்களின் விடா முயற்சியையும் பாராட்டியுள்ளார்.

இதுவரை இந்தியா முழுவதும் 35 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக அதிகளவானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *