மஹிந்த ராஜபக்சவிற்கு அடுத்து தானே மூத்தவர் எனவும் தனக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்காமல் இருப்பது பாரிய தவறு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்களாக இருப்பது தனக்கு கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தானும் மஹிந்த சமரசிங்கவுமே மஹிந்த ராஜபக்சவிற்கு அடுத்த மூத்தவர்கள் என எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் அமைச்சுப் பதவி வகித்த காலத்தில் வழங்கிய அனைத்து அமைச்சுக்களையும் சரியாக செய்து காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்