ஈழத்தமிழர் அரசியல் நடவடிக்கைகளின் போது, கடந்த 1983 ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையில் தென்மராட்சி தெற்கு பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறவன்புலவு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது,
குறித்த கல்வெட்டு மறவன்புலவு சு. சச்சிதானந்தனால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதில் “ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலம் தொடர்பான நடவடிக்கைகளால் திபி 2014 (1983) தொடக்கம் திபி 2039 (2008) வரையான காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் உற்றார் தெரிவித்த தென்னமராட்சி தெற்கார் பட்டியல்”
“காணவில்லை என்பதால் உங்களை நாம் மறக்கவில்லை. நீங்கள் திரும்பினாலும் திரும்பாவிடினும் நம் உள்ளத்துள் நினைவுள் நீங்காதோரே. வரலாறு உங்கள் புகழைப் பேணும். ஈழத் தமிழர் ஈந்த ஒளி விளக்குகள் நீங்கள். உங்கள் நினைவால் உள்ளம் நெகிழும் அனைவர் சார்பிலும் என எழுதப்பட்டுள்ளதுடன் 32 பேருடைய பெயர் விபரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.