கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவு- பருத்தித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் ஊடாக அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தலைமறைவாகியுள்ளவர்கள் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை)  உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொற்றாளர்களை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கையினை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்த வேளையில்  6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

குறித்த 6 பேரும் பி.சி.ஆர்.மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்றபோதே, குறித்த 6 பேரும் தலைமறைவாகியுள்ளதால் பொலிஸாரின் உதவியை சுகாதாரத் துறையினர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *