யாழ். வல்வெட்டித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவைப்படகுகள் மோதியதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் இருவர் தப்பித்தபோதும் மற்றைய இருவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை கடல் பகுதிக்குள் நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் வல்வெட்டித்துறை மீனவர்களின் படகுகள் மீது மோதியுள்ளன.
இச்சம்பவத்தில் ஒரு படகு சேதமடைந்த நிலையில் கரையேறியுள்ளது. அப்படத்தில் பயணித்த இருவர் தப்பித்து கரைசேர்ந்துள்ளனர்.
இருப்பினும் மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த வளவன், ராகவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.