பேருந்தில் நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை – மீறினால் சட்ட நடவடிக்கை

பேருந்து பயணத்தின் போது நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளJ.

இதனை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.  

இதன்படி, இனிமேல் மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பேருந்து பயணத்தை முன்னெடுப்பதில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக சில நடத்துனர்கள் அவதானமின்றி மிதிபலகையில் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *