அரிசி பிரச்சினைக்கு 3 வாரங்களில் தீர்வு! பிரதி அமைச்சர் தெரிவிப்பு

அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கான உத்தேச விலையை வழங்க அரசாங்கம் துரிதமாகச் செயற்படும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் வனவிலங்குகளினால் பயிர்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால்  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படுள்ளது.

கடந்த கால நிலையில் பெய்த கனமழையால், சிறு ஓடை நிரம்பி, நெற்பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும் இதற்கு உடனடித் தீர்வு எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *