ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி சஜித் கடிதம்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *