அரசாங்கத்தில் இருந்து விலகுகிறதா சுதந்திரக்கட்சி? – மைத்திரி விளக்கம்

அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவிற்காக பொலனறுவையில் குறுதி நன்கொடை வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பாக இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *