தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்படலாம் – ஹேமந்த

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அவ்வாறு வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உலகில் வேறு எந்தப் பொறிமுறையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அவர், சோதனைக்காக எடுக்கப்பட்ட சீரற்ற மாதிரி மூலம் கண்டறியப்பட்டால் மட்டுமே நாட்டில் ஒரு புதிய மாறுபாடு அடையாளம் காண முடியும் என தெரிவித்தார்.

‘எந்தவொரு கொரோனா மாறுபாடும் இலங்கைக்குள் நுழையலாம் என்றும் அதைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட மாறுபாடு நாட்டில் பரவிய பிறகு ஒரு சீரற்ற மாதிரி மூலம் கண்டறியப்பட்டால் மட்டுமே இலங்கைக்குள் அந்த மாறுபாடு நுழைந்துள்ளது என்பதை நாம் அறிய முடியும் என தெரிவித்தார்.

ஏனெனில், நாம் முன்கூட்டியே அறிந்து கொண்டு அந்த மாறுபாடு ஒரு நாட்டிற்குள் நுழைவதை நிறுத்தவும் முடியாது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *