முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு சுதர்ஷினி கோரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு விதிப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக கண்டறியப்பட்டாலும் சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே வைரஸ் நோயாளர்களின் அளவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *