வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று புதன்கிழமை (1) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் ஆட்டு கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த குறித்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் பம்மைமடு பகுதியை சேர்ந்த சுஜந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது சிறுவனே மரணமடைந்துள்ளது.